காற்று ஒளியாவதைக் காணலாம்!

ஆகின்ற காலொளி யாவது கண்டபின்
போகின்ற காலங்கள் போவது மில்லையாம்
மேனின்ற காலம் வெளியுற நின்றன
தானின்ற காலங்கள் தன்வழி யாகுமே. – (திருமந்திரம் – 677)

விளக்கம்:
மூச்சுப்பயிற்சியின் போது நாம் விடும் மூச்சு ஒளிமயமாகிறது. அதை நாம் உணர்ந்து கொண்டால், பிறகு நாம் வாழ்நாள் வீணாகக் கழியாது. யோக வழியில் நின்று தூய்மையான வாழ்வு பெறலாம். அவ்வழியில் நிற்கும் போது காலம் கூட நம் வசப்படும்.


Also published on Medium.