பிராத்தி எனப்படும் சித்தி பெறலாம்

நின்றன தத்துவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படையவை யெல்லாங்
கொண்டவை யோராண்டு கூட இருந்திடில்
விண்டது வேநல்ல பிராத்தி யதாகுமே. – (திருமந்திரம் – 679)

விளக்கம்:
அட்டாங்கயோகம் பயிலும் காலத்தில் தத்துவ நாயகியான பராசக்தியை அறிந்து கொள்வதுடன், ஐம்பூதங்களின் இயக்கத்தையும் தள்ளி நின்று உணரலாம். இவ்வாறு ஐம்பூதங்களின் இயக்கத்தால் பாதிக்கப்படாமல் ஓராண்டு காலம் அவற்றை கவனித்து வந்தால், பிராத்தி எனப்படும் சித்தி பெறலாம்.