கரிமாவில் உண்மையை உணரலாம்!

போவதொன் றில்லை வருவது தானில்லை
சாவதொன் றில்லை தழைப்பது தானில்லை
தாமத மில்லை தமரகத் தின்னொளி
யாவது மில்லை யறிந்துகொள் வார்க்கே. – (திருமந்திரம் – 681)

விளக்கம்:
கரிமா என்னும் சித்தியினால் விண்ணின் தன்மை பெறலாம். அதாவது எதையும் பற்றில்லாமல் மேலிருந்து பார்க்கும் அனுபவம் கிடைக்கும். பற்றில்லாமல் வாழ்க்கையை பார்க்கும் போது பல உண்மைகள் விளங்கும்.

1. நாம் எதையும் இழப்பதில்லை, ஏதாவது கொண்டு வந்தால் தானே இழப்பதற்கு?
2. நாம் சாவதில்லை, காரணம் இந்த உலக வயதை ஒப்பிடும் போது நமது வாழ்நாள் என்பது மிக சொற்ப காலமே ஆகும். ஏதாவது வாழ்ந்திருந்தால் தானே சாவு?
3. நாம் எதிலும் தாமதம் செய்யவில்லை, கண நேரம் தோன்றி மறையும் நம் வாழ்நாளில் பெரிதாக எதுவும் ஆகப் போவதில்லை. அதனால் குற்றவுணர்வு தேவையில்லை.

அட்டாங்கயோகத்தில் நின்று அகத்தின் ஒளியை காண்பவர்க்கே இந்த உண்மைகள் புரியும்.