யோகத்தினால் அச்சம் நீங்கும்

நாயக மாகிய நல்லொளி கண்டபின்
தாயக மாகத் தழைத்தங் கிருந்திடும்
போயக மான புவனங்கள் கண்டபின்
பேயக மாகிய பேரொளி காணுமே. – (திருமந்திரம் – 692)

விளக்கம்:
அட்டாங்கயோகத்தை தொடர்ந்து பயிலும் யோகிகள், மேன்மை மிகுந்த பேரொளியைக் காண்பார்கள். அந்தப் பேரொளியின் வெளிச்சத்தையே தாயகமாகக் கொண்டு அங்கே வசிக்க விரும்புவார்கள். அவர்கள் யோகத்தின் போது தமது அகத்தில் உள்ள குழப்பங்களை ஆய்ந்து, தெளிந்து அச்சம் நீங்குவார்கள். எப்போதும் அச்சத்திலேயே இருந்த அவர்களது மனம் அச்சம் நீங்கி பேரொளியைக் காணும்.


Also published on Medium.