இந்திய வரலாற்றிலிருந்து சில குறிப்புகள் – பகுதி ஒன்று

 – இந்தியாவின் முதன்மையான புனித நூல் ரிக் வேதம். இன்றைய பஞ்சாப் பகுதி ரிக் வேதத்தில் சப்த சிந்தவா (ஏழு நதிகளை கொண்ட நிலம்) என்று அழைக்கப்படுகிறது. இப்போது அங்கே ஐந்து நதிகள் மட்டுமே ஓடுகின்றன – சிந்து, ஜீலம், சேனாப், ரவி, சட்லஜ் / பீஸ். 4000 வருடங்களுக்கு முன் சரஸ்வதி மற்றும் த்ரஸ்வதி என்னும் இரண்டு நதிகள் இருந்தனவாக நம்பப்படுகிறது. பின்னாளில் அவை வற்றிப் போயிருக்கலாம்.

– 8000 வருடங்களுக்கு முன் பெர்சியர்கள் இந்தியாவில் ஊடுருவ ஆரம்பித்த போது, அவர்கள் மேற்கே இருந்த சிந்து நதியை தொடர்புபடுத்தி அங்கே வசித்தவர்களை ‘ஹினாபு’ என்று அவர்கள் மொழியில் அழைத்தார்கள். பிறகு சுமார் 2000 வருடங்களுக்கு பிறகு மாசிடோனியர்கள் அலக்ஸாண்டரின் தலைமையில் அங்கே படையெடுத்தார்கள். அவர்கள் சிந்து நதியை ‘இந்தோஸ்’ என்றும் அதை சார்ந்த நிலப் பகுதியை ‘இந்தியா’ என்றும் கிரேக்க மொழியில் அழைத்தார்கள். ஆனால் நம் மக்கள் சில சமஸ்கிருத பெயர்களைத் தான் உபயோகித்துள்ளார்கள் – பாரத், மத்தியதேஷா மற்றும் ஜம்புத்விபா (இந்திய வரை படம் ஜம்பு மர வடிவில்  இருப்பதால்) என்றும் அழைக்கப்பட்டுள்ளது.

– கி.மு. 7000 வாக்கில் பலூசிஸ்தான் பகுதியில் முதன் முதலாக விவசாயம் செய்யும் வழக்கம் தோன்றியுள்ளது.

-கி.பி.1200க்கு முன்பு நமது நாடு பலமுறை வெளிநாட்டினரால் தாக்கப்பட்டிருந்தாலும் (பெர்சியர்கள், கிரேக்கர்கள், மத்திய ஆசியாவை சேர்ந்த குஷானர்கள், அராபியர்கள் மற்றும் துருக்கியர்கள்) அப்போதிருந்த இந்திய பேரரசர்களும் சிற்றரசர்களும் தங்கள் நிலப்பகுதிகளை காப்பாற்றி தக்க வைத்துக் கொண்டார்கள்.

-கி.பி.1200க்கு பிறகு ஆப்கன் மற்றும் மொகலாயர்கள் படையெடுப்புக்கு பிறகு இந்திய மன்னர்கள் தங்கள் சுய ஆட்சி உரிமையை சிறிது சிறிதாக விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை வந்தது.

(தொடரும்…)

Excerpts taken from ‘India The Ancient Past A History of the Indian Sub-Continent from C. 7000 BC to Ad 1200’BY BURJOR AVARI