திருமூலர் சென்ற இடத்துக்கு நாமும் செல்லலாம்!

தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும்
மாமனத்து அங்குஅன்பு வைத்த திலையாகும்
நீஇடர்ப் பட்டிருந்து என்செய்வாய் நெஞ்சமே
போமிடத் து என்னொடும் போதுகண் டாயே. –  (திருமந்திரம் – 544)

விளக்கம்:
தளிர் போன்ற நம்முடைய மனம் உலக விஷயங்களில் சிக்கி இடர்ப்பட்டு வாடிவிடுகிறது. நமது இடர்களுக்குக் காரணம் உலக விஷயங்களில் நாட்டம் கொள்வது தான் என்பதைப் புரிந்து கொண்டு, இறைவனிடம் அன்பு வைத்ததில்லை.

“ஏன் இப்படி உங்கள் மனத்தை இடர்பாட்டிலேயே வைத்திருக்கிறீர்கள்? ஞானம் பெற்ற பெரியவர்களின் துணை கொண்டு உங்கள் மனத்தை இறை வழியில் திருப்புங்கள். அப்படிச் செய்தால் நீங்களும் நான் போகும் இடத்துக்கு வருவீர்கள்” எனத் திருமூலர் சொல்கிறார்.