கடவுள் ஸார்!

ஸார்! கடவுள் ஸார்! நாம் கூப்பிடுறது கேட்கலையா ஸார்?

“கேக்குது சேதனன் ஸார். சொல்லுங்க ஸார். என்ன வேணும்?”

“ஸார், ஒரு வரம் வேணும் ஸார்”

“தயங்காம கேளுங்க ஸார்”

“ஒரு ஞாயிறு சாயங்காலம் என்னோட இருக்கணும்”

“என்ன புரோகிராம் சேதனன் ஸார்?”

“நான் எழுதின சில கதைகள நீங்க வாசிக்கணும் கடவுள் ஸார்”

“வாசிச்சா?”

“ஒரு வடையும் டீயும் வாங்கித் தருவேன் ஸார்”

“நல்ல மசாலா டீயா இருக்கட்டும் சேதனன் ஸார்”

“ஆனா ஒரு கண்டிஷன் ஸார். படிக்கும் போது கொஞ்சமும் முகம் சுளிக்கக் கூடாது. சுளிச்சா வடைய பிடுங்கிருவேன்”

“ம்ம். அடுத்த புரோகிராம் என்ன ஸார்?”

“ஒரு சினிமாவுக்கு போறோம் கடவுள் ஸார்”

“என்ன படம் ஸார்?”

“பரதேசி ஸார்”

“ஓ! விகடன் கூட நிறைய மார்க் போட்டிருக்கு. போலாம் ஸார்”

“ஒரு சின்ன விண்ணப்பம் கடவுள் ஸார்”

“சொல்லுங்க ஸார்”

“படம் பார்த்துட்டு ஒரு விமர்சனம் எழுதித் தரணும் ஸார். அதுல யாருமே யோசிக்காத கோணமெல்லாம் இருக்கணும் ஸார்”

“ஓண்ணும் ப்ரச்சனை இல்ல ஸார், சத்யம் சினிமாஸ்ல என்னோட ஆத்துக்காரிக்கும் சேர்த்து டிக்கட் புக் பண்ணிருங்க. போக வர என் டி எல் டாக்ஸிக்கு சொல்லிருங்க”

“ஸார்…”

“ஏன் சேதனன் ஸார் தலைய சொறியுறீங்க?”

“கடவுள் ஸார்! இதுக்கெல்லம் நீங்க காசு கொடுப்பீங்களா? என்கிட்ட வடையும் டீயும் வாங்கத்தான் காசு இருக்கு. நீங்க தான் நெறைய காசு வச்சுருப்பீங்களே ஸார்”

“சேதனன் ஸார்! காசில்லாதவனுக்கு எதுக்கு ஸார் பரதேசியும் விமர்சனமும்? போய் பொழப்பப் பாருங்க ஸார்”

________________________________________________________________________________________________________________________

Note to self – நாளைலருந்து ஒழுங்கா பொழப்பப் பாக்கணும்.


சிலப்பதிகாரத்தில் ஒரு சின்ன கைகலப்பு

நம்ம வீட்டில பூஜை நேரத்தில போடப்படும் சாம்பிராணிப் புகையை கவனிச்சு பார்த்திருக்கிறீங்களா? சின்ன வயசுல ரொம்ப நுணுக்கமாவே பார்த்திருப்போம். வளர வளர நம்ம observation கொறஞ்சு போயிருதே! அந்தப் புகைகள் ஒண்ணோட ஒண்ணு கலந்து அப்படியே மேல போறது எவ்வளவு அருமையான காட்சி! அப்படித்தான் கோவலனும் கண்ணகியும் ஒண்ணாக் கலந்து தன்ன மறந்து போனாங்களாம். மன்மதனும் ரதியும் கலந்து இருந்தாப் போல அவன் ஆற்றல் முழுசையும் கண்ணகிட்ட காட்ட, அவளும் தன் ஆற்றல் அத்தனையும் கோவலன் கிட்ட காட்ட, இப்படி ரெண்டு பேர் ஆற்றலும் அங்க கலந்து இருந்துச்சாம். அதுல அவங்களுக்கு ஏற்பட்ட நெறைவு கொஞ்சம் கூட கொறையலையாம்.  நெலயில்லாத இந்த வாழ்க்கைல முடிஞ்ச வரைக்கும் எல்லாத்தையும் அனுபவிச்சிரணும்கிற மாதிரி இருந்ததாம் அவங்க நெலம.

தூமப் பணிகளொன்றித் தோய்ந்தா லெனவொருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து-நாமந்
தொலையாத இன்பமெலாந் துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர்போல் நின்று.

(தூமம் – நறும்புகை, பணி – பரவுதல்,  கை – ஆற்றல்,  நாமம் – நிறைவு)

இங்கே கை கலந்து என்பது வலிமை அல்லது ஆற்றல் கலந்து என பொருள்படுகிறது.


சிவன் பார்வையிலிருந்து ஓடி ஒளிய வேண்டாம்

குறைந்துஅடைந் தீசன் குரைகழல் நாடும்
நிறைந்துஅடை செம்பொனின் நேர்ஒளி ஒக்கும்
மறைஞ்சடம் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்
புறஞ்சடம் செய்வான் புகுந்துநின் றானே. – (திருமந்திரம் – 40)

விளக்கம்:
சிவபெருமானைத் தாழ்மையுடன் வணங்கி அவன் திருவடியை நாடி இருப்போம். சிவன் திருவடி செம்பொன்னின் ஒளியைப் போன்று பிரகாசமாய் இருக்கும். நாம் அவனிடம் இருந்து ஓடி ஒளிய நினைக்காமல் வணங்கியிருந்தால், அந்த ஈசன் நம்மை புறக்கணிக்காமல் நம்முள் புகுந்து நிற்பான்.

Humble and meek, let us seek the Lord's feet,
Which can be compared to the shine of purest gold.
Don't try to hide yourself from the Lord.
For those who praise Him, He won't neglect them. He'll enter their heart.

என் வழி – தனி வழி

ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசைக் கும்கிழக் குத்திசை எட்டொடு
மாற்றுவன் அப்படி ஆட்டவு மாமே. – (திருமந்திரம் – 35)

விளக்கம்:
சிவபெருமான் தனக்கென தனி வழி உடையவன். அப்பெருமானைப் போற்றுவோம், போற்றிப் புகழ்வோம். அவ்வாறு புகழ்ந்தால் அந்த ஈசன் மேலுலகத்தையும், நிலவுலகில் உள்ள எட்டுத் திசைகளையும் நமக்கு அருள்வான். அவற்றை நம் விருப்பப்படி ஆளலாம்.

The Lord has His own way.
Let us praise and sing over Him.
If we praise him, He'll grant us all the eight directions
and the Celestial World, we can rule over them.

கண்ணகத்தே நின்று காதலித்தேனே!

மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத்து இன்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே. – (திருமந்திரம் – 31)

விளக்கம்:
சிவபெருமான் அவரவர் தன்மைக்கு ஏற்றவாறு வெளிப்பட்டு அருள்வான். மண்ணுலகில் வாழும் மனிதர்களுக்கு மனித வடிவிலும், வானுலகில் உள்ள தேவர்களுக்கு தேவ வடிவிலும், முக்தி அடைந்தவர்களுக்கு வீடு பேறு தருபவனாகவும், சித்திகளை விரும்பியவர்களுக்கு சித்தனாகவும் விளங்குகிறான். அவன் இனிய பாடல்களின் இன்னிசையாகவும் விளங்குகிறான். அப்பெருமானின் அருள் பெற்று அன்பினில் நின்றேனே!

(வேதகம் – சித்து, கண் – அருள்)

The Lord shows Himself in different forms
according to every one's nature.
For human as human, for Devas as Deva, For Sidhas as sidha.
He is the music of divine song. Let us be in love of His Grace.

வணங்கி நின்றார்க்கு வழித்துணை அவனே

இணங்கிநின் றான் எங்கும் ஆகிநின் றானும்
பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்
உணங்கிநின் றான்அம ராபதி நாதன்
வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே. – (திருமந்திரம் – 28)

விளக்கம்:
எல்லா உயிர்களுக்கும் இணக்கமாய் இருக்கிறான் சிவபெருமான். அவன் இல்லாத இடம் என்று எதுவும் இல்லை. உலகின் அனைத்துப் பொருள்களிலும் பின்னியவாறு விரவி உள்ளான். இறந்தகாலம், எதிர்காலம் எல்லாம் அவனே.  தேவர் உலகின் தலைவனான அவன் தனக்கென்று எந்த செயலும் இல்லாமல் இருக்கிறான். அவன் தன்னை வணங்கி வழிபடுபவர்க்கு வழித்துணையாக வருவான்.

(பிணங்கி – பின்னியவாறு, உணங்கி – செயலற்று)

He comply with every one, He exists every where.
He intertwined with every thing in this world.
He is the past and future. He is the Lord of Amaravati.
He'll be a guide for those who worship Him.

படர்ந்து நின்றான் பாரகம் எங்கும்

தொடர்ந்துனின் றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்
கடந்துநின் றாம்கம லம்மலர் மேலே
உடந்திருந் தான்அடிப் புண்ணிய மாமே. – (திருமந்திரம் – 26)

விளக்கம்:
நம்மைத் தொடர்ந்து நிற்கும் சிவபெருமானை வணங்குவோம். அவன் உலகின் அனைத்திலும் பரவி உள்ளான். இந்த உலகைக் கடந்தும் அவன் இருக்கிறான். நமது சகசிரதள ஆயிரம் இதழ் தாமரை மலரிலே வாசம் செய்கிறான். அந்த சிவபெருமானை வணங்கி இருந்தால், அவனது திருவடியை அடையும் பேறு பெறலாம்.

The Lord is continuously following us.
He spread over every thing in this world,
He exists beyond this world too, He resides in our Sahasrara.
If we worship Him, we can reach His Holy feet.

அல்லும் பகலும் அருளுகின்றான்

வல்லவன் வன்னிககு இறையிடை வாரணம்
நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை
இல்லென வேண்டா இறையவர் தம்முதல்
அல்லும் பகலும் அருளுகின் றானே.  –  (திருமந்திரம் – 23)

விளக்கம்:
எல்லாம் வல்ல ஆற்றல் உடையவன் நம் சிவபெருமான். கடலின் நடுவே அக்கினியை நிறுத்தி, கடல் நீரை எல்லை மீறாமல் நிறுத்தி வைப்பவன் அவன். அப்படிப்பட்ட நம் இறைவனை இல்லை என்று சொல்லி மறுக்காதீர்கள், அவன் இரவும் பகலும் எல்லா உயிர்களுக்கும் அருள் செய்தவாறு இருக்கிறான்.

Lord Siva, He is the God with capability.
He set fire amidst the ocean to prevent it crossing the limit.
Do not say He does not exist.
He is the one, who bless with grace for all the beings, day and night.

கானக் களிறு கதறப் பிளந்தவன்

வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்
கானக் களிறு கதறப் பிளந்தனம்
கோனைப் புகழுமின் கூடலு மாமே.  –  (திருமந்திரம் – 21)

விளக்கம்:
வானத்தில் உள்ள மேகம் போன்ற கரிய நிறம் கொண்ட திருமால், பிரமன் மற்றும் தேவர்களின் இழிந்த பிறவியை நீக்கியவன் சிவபெருமான். அப்பெருமான் காட்டு யானை போன்ற நம் ஆணவத்தைக் கதறும்படி பிளந்தவன்.  அத்தலைவனைப் போற்றிப் புகழ்ந்திருந்தால், அவனுடன் இரண்டறக் கலந்திருந்து பேரின்பம் பெறலாம்.

He is the one who remove birth and death cycle of 
Lord Thirumal, Lord Brahma and other Devas.
He is the one who destroys our wild elephant like egotism.
Let us praise Him and be in close with Him.

இடியும் முழக்கமும் ஈசன் உருவம்

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறனெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்ற மலையது தானே.  –  (திருமந்திரம் – 20)

விளக்கம்:
நாம் கருவில் உதிப்பதற்கு முன்பே, நம் பிறப்பையும் இறப்பையும் வரையறை செய்தவன் சிவபெருமான். அப்பெருமான் வசிக்கும் அறநெறியை நாடி இருப்போம். அவ்வழியை நாடி இருப்போர்க்கு இடியும் முழக்கமும் கூட ஈசனின் உருவமாகவே தோன்றும். தொடர்ந்து அவ்வழியை நாடி இருந்தால் வாசனை மலர்கள் நிறைந்த மலைதனில் வசிக்கும் ஈசனைக் காணலாம்.

He is the one who assigned our birth and death very before.
Let us walk in the path that leads towards Him.
In that Holy path, even the thunder sound will be a form of Siva.
Pursuing in the path we shall reach Him, who resides in the fragrant mountain.