சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்

தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே அரசு நிலைகெடும்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே.  –  (திருமந்திரம் – 515)

விளக்கம்:
திருக்கோயில் ஒன்றில் உள்ள சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்து வேறொரு இடத்தில் நிறுவ முயன்றால், அதைச் செய்து முடிப்பதற்கு முன்னால் அந்நாட்டின் அரசுக்கு கேடு விளையும். அச்செயலைச் செய்தவன் சாவதற்கு முன்னால் கடுமையான நோய்களால் துன்புறுவான். இது நம் தலைவனான நந்திபெருமானின் ஆணையாகும்.

தாவரம் – அசையாத பொருள்

One thought on “சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்

Comments are closed.