ஆயிரமாயிரம் வெற்றிகளைப் பெறலாம்

ஒன்றது வாகிய தத்துவ நாயகி
ஒன்றது கால்கொண் டூர்வகை சொல்லிடில்
ஒன்றது வென்றிகொள் ஆயிரம் ஆயிரம்
ஒன்றது காலம் எடுத்துளும் முன்னே. – (திருமந்திரம் – 698)

விளக்கம்:
யாருடனும் ஒப்பிட முடியாத தனிப்பெரும் தத்துவ நாயகியாம் நம் பராசக்தி. பிராணாயாமத்தின் போது நடுநாடியாகிய சுழுமுனையில் அவள் ஊரும் வகையை உணர்ந்தால் ஆயிரமாயிரம் வெற்றிகளைப் பெறலாம். மனம் ஒன்றி பராசக்தியை மனத்தில் நினைத்து மூச்சுக்காற்றை சுழுமுனையில் செலுத்தும் பயிற்சியில் வெற்றி பெற்றால், அப்பயிற்சி வாழ்க்கையில் ஆயிரமாயிரம் வெற்றிகளைக் கொண்டு வரும்.