கிழமை அறிந்து மூச்சு இயங்கினால் பேரானந்தம்!

செவ்வாய் வியாழம் சனிஞாயி றேஎன்னும்
இவ்வா றறிகின்ற யோகி இறைவனே
ஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட்
டவ்வா றறிவார்க்கவ் வானந்த மாமே – 792

விளக்கம்:
செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் மூச்சுக்காற்று வலப்பக்கமாக இயங்க வேண்டும் என்பதை உணர்ந்த யோகிகள் சிவனைப் போன்றவர் ஆவார்கள்.  மேற்கூறிய கிழமைகளில், மூச்சுக்காற்று மாறி இடப்பக்கமாக இயங்கினாலும், அவர்கள் வலப்பக்கமாக மாற்றி இயங்கச் செய்து ஆனந்தமடைவார்கள்.

ஒவ்வாத வாயு – மூச்சுக்காற்று மாறி இயங்குதல்