வெறுமை!

மொத்த உலகும் என் அன்புப் பிடியில்
இருந்த அந்த கண நேர விநோத
நிலையில் தோன்றியதிது –

அறியாமையும் அவலமும்
தவிர்த்து பார்த்தால்,
புவியில் செய்யப்படும்
ஒவ்வொரு தீவினையும்
முன்னால் நிறைந்து நிற்கும் வெறுமையை
நிரப்பும் முயற்சி அது.
அதன் பின்னால் காத்துக் கிடக்கும்
மரணத்தை மறுக்கும் செயல் அது என்பது.

இப்போது புரிகிறது –
உலகின் ஒவ்வொருவரையும்
நான் வெறுக்க முடியுமென்பது!