பிரதோஷ நாயகன்!

நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நானிருந் தேனே.  – (திருமந்திரம் –68)

விளக்கம்:
நந்தி பெருமானின் அருளாலே ஆசிரியன் எனப் பேர் பெற்றோம். நந்தியின் அருளாலே மூலனாகிய சிவபெருமானை நாடினோம். இந்த உலகினில் நந்தியின் அருளினால் செய்ய முடியாத காரியம் என்ன உள்ளது? அந்த பெருமானின் வழிகாட்டுதலின்படி நான் இருக்கின்றேன்.

(நாதன் – குரு, ஆசிரியர்)

By Nandi's Grace, we got named as Guru,
By Nandi's Grace, We seek the Eternal Lord,
By Nandi's Grace, everything is possible in this world,
I remain by the guidance of Nandi.