சிரசில் நிற்கிறான் ஈசன்

கடந்துநின் றான்கம லம்மல ராதி
கடந்துநின் றான்கடல் வண்ணம்எம் மாயன்
கடந்துநின் றான்அவர்க்கு அப்புறம் ஈசன்
கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே.  –  (திருமந்திரம் – 14)

விளக்கம்:
சிவபெருமான் சுவாதிட்டானத்தில் விளங்கும் நான்முகனைக் கடந்து விளங்குகிறான். மணிப்பூரகத்தில் விளங்கும் திருமாலைக் கடந்துள்ளான். அவர்க்கு அப்புறம் அநாகதச் சக்கரத்தில் விளங்கும் உருத்திரனைக் கடந்துள்ளான். இவை எல்லாவற்றையும் கடந்து சிரசின் மேல் நின்று யாவற்றையும் கவனித்தவாறு உள்ளான்.

Lord Siva transcends Brahma, He who resides in Swadishtana.
The Lord also transcends Thirumal, He who resides in Manipuraka.
Then the Lord transcends Urithira, He who resides in Anahata.
Witnessing all these our Lord Siva stands in the space above our head.