அண்ணலின் பெருமை!

ஆரறி வார் எங்கள் அண்ணல் பெருமையை
யாரறி வார்இந்த அகலமும் நீளமும்
பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேரறி யாமை விளம்புகின் றேனே.   – (திருமந்திரம் – 95)

விளக்கம்:
யாருக்குத் தெரியும் எங்கள் சிவபெருமானின் பெருமை முழுவதும் ? அந்த பெருமானின் பரப்பை அறிந்தவர் யாரும் இல்லை! தனக்கென பெயரும் உருவமும் இல்லாத பெருஞ்சுடர் எங்கள் சிவபெருமான். அந்த பெருஞ்சுடரின் வேர் யாராலும் அறிய முடியாதது.