நியமத்தரின் கடமைகள்

தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ்
சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி
மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீர் ஐந்து
நிவம்பல செய்யின் நியமத்த னாமே.  –  (திருமந்திரம் – 557)

விளக்கம்:
தவம், செபம், மகிழ்ச்சி, தெய்வ நம்பிக்கை,  தானம், விரதம்,  கல்வி, யாகம், சிவபூசை, பேரொளி தரிசனம் ஆகிய பத்து கடமைகளை நாம் செய்து வந்தால் நியமத்தில் நிற்கிறோம் என்று அர்த்தம்.

சந்தோடம் – மகிழ்ச்சி,  சித்தாந்தம் – சிவாகமம்,   கேள்வி – கல்வி,   மகம் – யாகம்