உள்ளத்தில் இடம் கொடுப்போம்!

கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்து
உடலுடை யான்பல ஊழிதொ றூழி
அடல்விடை யேறும் அமரர்கள் நாதன்
இடமுடை யார்நெஞ்சத் தில்லிருந் தானே.  – (திருமந்திரம் –299)

விளக்கம்:
கயிலாய மலையில் வசிக்கும் சிவபெருமான், இந்த உலகில் பரந்திருக்கும் கடல் அனைத்தையும் தன்னுடையதாகக் கொண்டவன். ஐந்து பூதங்களையும் உடலாகக் கொண்டவன்.  வெற்றியுடைய காளையில் அமர்ந்திருக்கும், தேவர்களின் தலைவனான அவன், பல யுகங்களாக, தன் உள்ளத்தில் இடம் கொடுத்தவர்களின் மனத்தில்  ஒளியாய் விளங்குகிறான்.

(ஐம்பூதங்கள் – மண், விண், நீர், தீ, காற்று.   அடல் விடை – வெற்றியுடைய காளை)