சிவனை வேண்டினால் மற்ற தெய்வங்களும் அருள்வார்கள்

மயன்பணி கேட்பது மாநந்தி வேண்டின்
அயன்பணி கேட்பது அரன்பணி யாலே
சிவன்பணி கேட்பவர் தேவரும் ஆவர்
பயன்பணி கேட்பது பற்றது வாமே.  – (திருமந்திரம் –302)

விளக்கம்:
நந்தியம் பெருமானை வேண்டினால் திருமாலின் அருட்செயலையும் புரிந்து கொள்ளலாம். சிவத்தொண்டு செய்தால் பிரமனின் அருட்செயலையும் புரிந்து கொள்ளலாம். எல்லாமே சிவன் செயல் என்பதைப் புரிந்து கொள்பவர்கள் வானுலகின் தேவர்கள் ஆவார்கள். உலகப்பற்று உடையவர்கள், இவற்றை எல்லாம் விட்டு, செய்யும் செயலுக்கு என்ன பயன் கிடைக்கும் என்று  யோசித்துத் தங்கள் காலத்தை வீணே கழிப்பார்கள்.