ஊனாய் உயிராய் உணர்வாய்

ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னஞ்
சேணாய்வா னோங்கித் திருவுரு வாய் அண்டத்
தாணுவும் ஞாயிறுந் தண்மதி யுங்கடந்
தாண்முழு தண்டமு மாகிநின் றானே. – (திருமந்திரம் – 374)

விளக்கம்:
சிவபெருமான் நமது உடலாகவும், உயிராகவும், உணர்வு என்னு அக்கினியாகவும் இருக்கிறான். அவன் இந்த உலகின் மூத்தவன். அவன் வானோங்கிய அளவுக்கு, உயரமான திருவுருவம் கொண்டவனாக இருக்கிறான். இந்த உலகத்தைத் தாங்கும் தூணாக இருப்பவன் நம் சிவபெருமானே! சூரியனையும், குளிர்ந்த சந்திரனையும் தாண்டி அனைத்து உலகையும் அவன் ஆள்கிறான்.