சிவன் சேவடி!

சேவடி ஏத்துஞ் செறிவுடை வானவர்
மூவடி தாவென் றானும் முனிவரும்
பாவடி யாலே பதஞ்செய் பிரமனுந்
தாவடி யிட்டுத் தலைப்பெய்து மாறே. – (திருமந்திரம் – 376)

விளக்கம்:
மாவலியிடம் மூன்றடி நிலம் கேட்ட திருமாலும், பாடல் வடிவிலான மந்திரங்களால் முனிவர்கள் போற்றும் பிரமனும், நம் சிவபெருமானின் திருவடியைத் தேடிச் சுற்றி அலைந்தார்கள். ஆனால் தாம் கொண்டிருந்த அகங்காரத்தினால் அவர்களால் சிவன் திருவடியை அடைய முடியவில்லை. நாம் நம் பெருமானை மனத்திற்கு நெருக்கமாக வைத்து வழிபட்டால், தாமரை மலர் போன்ற சிவந்த அவன் திருவடியை அடையலாம்.