சிவனும் சக்தியும் நமது வளர்ப்புத் தாயார்கள்!

அருளல்ல தில்லை அரனவன் அன்றி
அருளில்லை யாதலி னவ்வோர் உயிரைத்
தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே.  – (திருமந்திரம் – 475)

விளக்கம்:
சிவனும் அன்பும் வேறு வேறு இல்லை. அன்பு இல்லாமல் சிவன் இல்லை, சிவன் இல்லாமல் அன்பு இல்லை. அப்படி அன்பே வடிவான சிவன் நமக்கு இந்த உயிரைத் தந்திருக்கிறான். சிவனும் சக்தியும் நமக்கு வளர்ப்புத் தாயார்களாக இருந்து நம்மை அன்போடு வளர்க்கிறார்கள்.