சிவனும் சக்தியும் நம்முள்ளே நிறைந்திருக்கிறார்கள்!

வகுத்த பிறவியை மாதுநல் லாளுந்
தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும்
பகுத்துணர் வாக்கிய பல்லுயிர் எல்லாம்
வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பது வாமே.  – (திருமந்திரம் – 476)

விளக்கம்:
நமது முற்பிறவியின் வினைகளுக்கு ஏற்ப நமக்கு புதிய பிறவியை வகுக்கிறாள் சக்தி. நமது நல்வினைகளுக்கு ஏற்ப துன்பம் என்னும் இருளை நீக்குகிறான் நற்சோதியான சிவபெருமான். இருவரும் சேர்ந்தே உலகின் படைப்பை முடிவு செய்கிறார்கள். சிவனும் சக்தியும் நமக்கெல்லாம் உயிரைக் கொடுத்து, உணர்வைக் கொடுத்து, நமக்குள்ளேயும் நிறைந்து நிற்கிறார்கள்.