பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா?

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்
பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.  – (திருமந்திரம் – 478)

விளக்கம்:
கூடலின் போது, ஆணின் ஆளுமை அதிகமாக இருந்தால், பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கும். பெண்ணின் ஆளுமை அதிகமானால், பிறக்கும் குழந்தை பெண்ணாகும். ஆண், பெண் இருவரின் ஆளுமையும் சம அளவில் இருக்கும் போது, பிறக்கும் குழந்தை அலியாகும். கூடலின் போது ஆணின் விந்தில் உயிராற்றல் மிகுந்திருந்தால், பிறக்கும் குழந்தை இந்த உலகத்தை ஆளும் ஆற்றல் கொண்டதாக இருக்கும். பாய்கின்ற விந்து அழிக்கும் ஆற்றல் கொண்டதாக இருந்தால், உருவாகும் கரு பயனின்றி அழிந்து விடும்.