பன்னிரெண்டாம் ஆண்டு அட்டமாசித்தி!

ஈரைந்திற் பூரித்துத் தியான உருத்திரன்
ஏர்வொன்று பன்னொன்றில் ஈராறாம் எண்சித்தி
சீரொன்று மேலேழ் கீழேழ் புவிச்சென்று
ஏரொன்று வியாபியாய் நிற்றல்ஈ ராறே. – (திருமந்திரம் – 648)

விளக்கம்:
மூச்சுப்பயிற்சியின் போது நாம் மூச்சை இழுக்கும் போது பூரித்து நிற்கிறோம். தொடர்ந்து பத்தாண்டுகள் பூரித்துப் பயிற்சி செய்தால் குண்டலினி கீழிறங்காமல் மேலேறியவாறு இருக்கும். உருத்திரனைப் போல விளங்கலாம். இன்னும் தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் பதினோறாம் ஆண்டு குண்டலினி  இன்னும் மேல் ஏறுவதைக் காணலாம். பன்னிரெண்டாம் ஆண்டு அட்டமா சித்திகளைப் பெறலாம். அட்டமாசித்தி பெற்றால் மேலே உள்ள ஏழு உலகங்களுக்கும், கீழே உள்ள ஏழு உலகங்களுக்கும் தடையின்றிப் போய் வரலாம். பன்னிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்து யோகப் பயிற்சி செய்தால் பொலிவு பெறுவதுடன் எங்கும் நிறைந்து நிற்கும் ஆற்றல் பெறலாம்.


Also published on Medium.