நாடித்துடிப்பு இருக்கும் வரையில் சிவனை நினைப்போம்!

நாடியின் ஓசை நயனம் இருதயம்
தூடி யளவுஞ் சுடர்விடு சோதியைத்
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்றங் குணர்ந்திருந் தாரே. – (திருமந்திரம் – 657)

விளக்கம்:
ஈசன், திருமால், பிரமன் ஆகியோர், என்றும் சுடர் விடும் சோதியான நம் சிவபெருமானை கண நேரமும் விடாமல் தியானம் செய்கிறார்கள். நாமும் நம் கண்ணிலும் இருதயத்திலும் நாடியின் ஓசையை உணர்ந்திருக்கும் வரை அந்தச் சுடர் விடும் சோதியை நம் சிந்தையில் இடையறாது நிறுத்துவோம்.