சித்தம் சுத்தம் பெற கேசரி யோகம் செய்வோம்

வண்ணான் ஒலிக்குஞ் சதுரப் பலகைமேற்
கண்ணாறு மோழை படாமற் கரைகட்டி
விண்ணாறு பாய்ச்சிக் குளத்தை நிரப்பிட்டு
அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே – 800

விளக்கம்:
நம் சித்தத்தை சுத்தம் செய்யும் பொருட்டு நாம் செய்யும் கேசரி யோகத்தை, வண்ணான் அழுக்குத்துணிகளை பலகையின் மேல் அடித்துத் துவப்பதை உவமையாகச் சொல்கிறார் திருமூலர். யோகத்தில் நாம் கவனம் செலுத்தும் நெற்றிப்பகுதியை, வண்ணான் உபயோகிக்கும் சதுரப் பலகையாக உவமை செய்கிறார்.

அழுக்குத்துணிகளை வண்ணான் பலகையில் அடித்துத் துவைப்பதைப் போல, நம் கவனத்தை நெற்றியிலே நிறுத்த வேண்டும். கேசரி யோகப்பயிற்சியின் போது, நம் தலை உச்சியில் அமிர்தம் ஊறும். அவ்வமிர்தத்தை நெற்றிப்பகுதியில் குமிழி விழாமல் தேக்கி வைக்க வேண்டும். இவ்வாறான நிலையில் நம் கவனம் அண்ணாந்தவாறே இருந்தால் சித்தம் அழுக்கு நீங்கி சுத்தம் பெறும்.

மோழை – குமிழி, கண்ணாறு – கண்ணின் கவனத்தை நெற்றியில் நிறுத்தி ஊறும் அமுதத்தை கரை கட்டி நிறுத்துதல், விண்ணாறு – உச்சந்தலையில் ஊறும் அமிர்தம்


Also published on Medium.