நூறு மிளகு நுகருஞ் சிவத்தினீர்
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள்
தேறில் இதனைத் தெளியுச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறுமயி ராமே – 847
விளக்கம்:
அட்டாங்கயோகத்தில் நின்று, தலை உச்சியில் மனத்தை நிறுத்தி தியானம் செய்யுங்கள். தலை உச்சியில் உள்ள சகசிரதளத்தில் மனம் குவியும் போது, அந்த வெளி இளகி சிவநீர் ஊறும், அதனை நுகருங்கள். ஆராய்ந்து பார்த்தீர்கள் என்றால் சகசிரதளத்தில் ஊறும் அந்நீருக்கு இணையான சிறந்த மருந்து வேறு ஒன்றில்லை. இந்த உண்மையை உணர்ந்தவர்கள் தங்கள் கவனத்தை தலை உச்சியிலேயே நிறுத்தி நிலை பெறச் செய்வார்கள். அமுரி எனப்படும் இந்தச் சிவநீரை தாரணை செய்பவர்களுக்கு கருத்த மறுமயிர் முளைப்பதைக் காணலாம்.
நூறு மிளகு நுகரும் – நூறும் + இளகும் + நுகரும், சிவத்தினீர் – நம் தலை உச்சியில் ஊறும் சிவநீர்