உங்கள் வருமானம் மோரா அல்லது நெய்யா?

பழமொழி நானூறு – சான்றோர் செய்கை

சிறியவர் எய்திய செல்வத்தின் நாணப்
பெரியவர் நல்குரவு நன்றே – தெரியின்
மதுமயங்கு பூங்கோதை மாணிழாய்! மோரின்
முதுநெய்தீ தாகலோ இல்.

பாலிலிருந்து கிடைக்கும் மோரின் அளவு அதிகமாகவும் நெய்யின் அளவு மிகச் சிறிதாகவும் இருந்தாலும், மோரை விட நெய் வெகு நாள் கெடாமலும் நன்மை தருவதாகவும் உள்ளது. அதுபோல தீய வழியில் சேர்க்கும் அதிக செல்வத்தை விட நியாயமான முறையில் சேர்க்கும் செல்வம், வறுமை என்று சொல்லக்கூடிய அளவுக்கு சிறிதாக இருந்தாலும் நன்மை தருவதாகும்.