பிஞ்ஞகன் !

பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே. – (திருமந்திரம்)

விளக்கம்:
பேரருள் தரும் சிவபெருமான் பிறப்பு, இறப்பு இல்லாதவன். பிஞ்ஞகன் என்று அழைக்கப்படுபவன். தொடர்ந்து யாவர்க்கும் இன்பம் அருளும் அவனைத் தொழுவோம். தொழுதால் அந்த சிவன் நம்மை மறவாமல் நினைந்து நம்முடய மன மயக்கத்தை அகற்றுவான்.

(வள்ளலார்  இராமலிங்க அடிகள் பிஞ்ஞகன் என்னும் பெயர் பற்றி இப்படிச் சொல்கிறார் – “பிஞ்ஞகப் பேர் மெல்லினத்தின் நல்லிசை” என்றும், அந்த பெயர் ஒலியாத நாசியை “நல்லிசைதான் தோயாத நாசித்துளை” என்று கூறுகின்றார்).

Birth-less He, having Vast Compassion,
Deathless He, Grants Joy to all,
He Never desert his devotee, We kneel to him.
By kneeling towards him we'll get free from Maya.