வரி செலுத்தி ஓய்ந்தோம்

ஐவர் அமைச்சருள் தொண்ணூற்று அறுவர்கள்
ஐவரும் மைந்தரும் ஆளக் கருதுவர்
ஐவரும் ஐந்த சினத்தொட நின்றிடில்
ஐவர்க்கு இறைஇறுத்து ஆற்றகி லோமே. – (திருமந்திரம் – 2027)

விளக்கம்:
ஐம்பொறிகளான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை நமக்கு ஐந்து அமைச்சர்களாக இருக்கிறார்கள்.  அவர்கள் ஒவ்வொருத்தரின் கீழும் தொண்ணுற்றாறு வீரர்கள் வேலை செய்கிறார்கள். இவர்கள் அத்தனை பேரில் உள்ள ஒவ்வொருவரும் தாம்தான் நம்மை ஆள வேண்டும் என நினைக்கிறார்கள்.

இந்த அமைச்சர்கள் ஐவரும் நம்முடன் ஐந்து வகையான போர் தொடுத்தபடி இருக்கிறார்கள். இவர்களுக்கு நம்மால் வரி செலுத்தி மாளாது.

அரசர்களான நாம் நம் அமைச்சர்களை (ஐம்பொறிகளை) கட்டுபாட்டில் வைத்திருக்க முடியாமல் அவர்களின் போருக்கு பயந்து வரி செலுத்தி வருகிறோம்.

(மைந்தர் – வீரர்)

Our five senses are like five ministers under us.
Each minister have ninety six soldiers, each trying to rule us.
The five ministers are always doing war against us in their ways
Endless is the tax we are paying them.