அணையா விளக்கு அவன்

அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியார் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கென்று மேவிநின் றேனே. – (திருமந்திரம் – 48)

விளக்கம்:
அடியார் வணங்கும் தேவர்களின் தலைவன் சிவபெருமான். அந்த முதல்வனை நினைத்து தலையால் வணங்குவேன். இந்த உலகத்தாருக்கு அருளும் எம் தந்தையான முழுமுதற் கடவுள் அவனை அணையாத விளக்காய் நினைத்து பொருந்தி நின்றேனே!

(முன்னி – நினைத்து,  படி – உலகம்,  பரம்பரன் – முழுமுதற் கடவுள்,   விடியா விளக்கு – அணையா விளக்கு)

The Lord of Devas whom the devotees adore,
Seeking Him, I bow my head to worship
The Lord, our Father, he is blessing this whole world.
I seek that ever glowing lamp.