விளக்கேற்றுவோம்!

விளக்கினை யேற்றி வெளியை அறிமின்
விளக்கினை முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.  – (திருமந்திரம் – 1818)

விளக்கம்:
விளக்கு ஏற்றி எல்லையற்ற பரம்பொருளை அறிவோம். விளக்கின் ஒளியின் முன் நம் வேதனைகள் அகலும். விளக்கு ஏற்றத் தூண்டும் ஞானமாகிய விளக்கு உடையவர்களுக்கு, ஏற்றப்படும் விளக்கினில் சிவன் ஒளியாய் காட்சி தருவான்.

Let we light the lamp and realize the eternal God.
Before the lamp light, our troubles will go away.
For those who have the light of knowledge,
in their lamp light, the Divine Light will show Himself.

அணையா விளக்கு அவன்

அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியார் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கென்று மேவிநின் றேனே. – (திருமந்திரம் – 48)

விளக்கம்:
அடியார் வணங்கும் தேவர்களின் தலைவன் சிவபெருமான். அந்த முதல்வனை நினைத்து தலையால் வணங்குவேன். இந்த உலகத்தாருக்கு அருளும் எம் தந்தையான முழுமுதற் கடவுள் அவனை அணையாத விளக்காய் நினைத்து பொருந்தி நின்றேனே!

(முன்னி – நினைத்து,  படி – உலகம்,  பரம்பரன் – முழுமுதற் கடவுள்,   விடியா விளக்கு – அணையா விளக்கு)

The Lord of Devas whom the devotees adore,
Seeking Him, I bow my head to worship
The Lord, our Father, he is blessing this whole world.
I seek that ever glowing lamp.