இந்துவும் பானுவும்

இந்துவும் பானுவும் இருவரும் உயரமாய்
பந்தென ஆடுவார் பளிச்சிடும் ஒளியுடன்!
இந்துவந் தாடுவாள் இரவிலே குளிர்ச்சியாய்
முந்திடு பானுவை, முன்னெழு தினமே!

(இந்து – நிலா, பானு – சூரியன். அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன் எழ வேண்டும் என்பதே இந்த பாடலின் பொருள்)


சிவபெருமானிடன் உபதேசம் பெற்றவர்கள்

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்டகி லானே. – (திருமந்திரம் – 71)

பிறப்பு, இறப்பு ஆகிய இரண்டுமே இல்லாத பெருமை உடையவன் சிவபெருமான். அவன் தனது கடந்த கால பெருமையை வெளியே காட்டிக் கொள்வதில்லை. சந்திரன், சூரியன், அக்கினி ஆகிய மூன்று வடிவாகவும் உள்ள சிவபெருமான் சிவயோக முனிவர், பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய மூவர்க்கும், சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வருக்கும் உபதேசம் அருளினான்.