காலாங்கி நாதருக்கு ஃபேஸ்புக் பிடிக்காது

சித்தர் காலாங்கி நாதர் எனக்கு அருளிய பிரத்தியேக உபதேசம் இது.

பேசவே தெரியா உனக்கிந்த
…… ஃபேஸ்புக் பக்கம் ஒருகேடா?
நாசமாய் போச்சே உனதுபணி
….. நேரம் முழுதும் வீணாச்சே!
காசதைப் பாரடா நீயென்ன
….. கருத்துகந் தசாமி பெற்றவனா?
நேசமாய் பாரடா வெளியுலகினை
….. நட்பென ஆகுமே உலகமெல்லாம்.!


யான் பெற்ற இன்பம்!

யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே. – (திருமந்திரம் – 85)

திருமூலர் சொல்கிறார் “ஆன்மிக அனுபவத்தில் நான் பெற்ற இன்பமெல்லாம் இந்த உலகத்தில் உள்ள எல்லா மக்களும் பெறட்டும். விண்ணைத் தாங்கி நிற்கிற வேதப்பொருளான சிவபெருமானைப் பற்றிச் சொல்கிறேன் கேளுங்கள். அந்த சிவபெருமான் நம் உடலைத் தாங்கி நிற்கிறார், உணர்வுமிக்க மந்திர வடிவில். நாம் அதை உணர முயலும் போது அவர் வெளிப்பட்டு அருள்வார் ”.

விண்ணைத் தாங்கி நிற்பதும் சிவன்தான், இந்த உடலைத் தாங்கி நிற்பதும்சிவன் தான்.