கண்ணாடி நாக்கு

வாவுறும் மனதுடன் வால்சுழற் றும்நாவும்
தாவுறும் வளைவுறும் தரம்குறைந் தும்பேசும்.
அடங்குமே வயங்கலால் ஆனதொரு செந்நாவும்
மடங்கினால் உடையுமே மதியுடன் பேசுமே!

(வாவுறும் – தாண்டிடும், வயங்கல் – கண்ணாடி)

இதன் original –
if only
our tongues
were made
of glass

how much
more careful
we would be
when we
speak – Shaun Shane


மந்திரமாலை!

பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடுங் கூடிநின்று ஓதலு மாமே. – (திருமந்திரம் – 86

இந்த உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் பிறப்பு என்று உண்டு, பிறந்து விட்டால் இறப்பு என்பதும் ஒரு நாள் உறுதி. சிவபெருமான் இந்த பிறப்பு, இறப்புக்கெல்லாம் அப்பாற்பட்டவன்.  நந்தி என்ற திருப்பெயர் கொண்ட அந்த சிவபெருமானை வானுலகில் உள்ள தேவர்களெல்லாம் வணங்கி, இந்த மந்திரமாலையை மனப்பாடமாகச் சொல்வார்கள். நீங்களும் கூடியிருந்து திருமந்திரம் என்று அழைக்கப்படும் இந்த மந்திரமாலையை அதன் சுவையறிந்து படித்துப் பயன் பெறுங்கள்.