இந்தக் காற்று எனக்கு பரிச்சயம்

கடலைப் போல இந்தக்
காற்றும் அலை மிகுந்தது
என்பது தெரிந்தது தானே!

இந்தக் காலை நேரக் காற்று பரிச்சயமானது.
அதே அலை, அதே குளிர், அதே வேகம்.
நெளிதலும் குழைதலும் கூட அதேதான்.

கடந்து போன அதே காற்று
திரும்ப வந்து தடவிப் பார்த்து
சந்தேகத்துடன் கேட்டது.
“ஒற்றை உடலாய் இருக்கிறாயே?”

ஏதோ பழைய ஞாபகம் போல!