நம்முடைய அறிவின் அளவு என்ன?

பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்
இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
மருள்கொணட மாதர் மயலுறு வார்கள்
மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே. – (திருமந்திரம் – 203)

விளக்கம்:
நம்முடைய அறிவின் அளவு என்பது, இருட்டுக்குள்ளே ஒரு மின்னலின் போது தெரியும் காட்சி போன்றது தான். சிலர் இது புரியாமல் தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அவர்களிடம் பணவசதியும் இருந்து விட்டால் சொல்லவே வேண்டியதில்லை. அப்படிப்பட்ட அவர்கள் மருட்சியான பார்வை கொண்ட பெண்களின் மீது மயக்கம் கொள்கிறார்களே தவிர, தங்கள் அறியாமையை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று நினைப்பதேயில்லை.