உதடும் உயிரும் கரைந்ததே

இனிப்புச் சாரலென வந்து ஒட்டும்
மகிழ்ச்சித் தீண்டலில்
கரைந்ததென் உதடும் உயிரும்.

ஒவ்வொரு துளியிலும்
ஆயிரமாயிரம் நுண்மைகள்.
ஒன்று விடாமல்
ரசித்தேன்
ருசித்தேன்.

இன்னும் கொஞ்சம்
இன்னும் கொஞ்சம்
என கேட்டு வாங்கியும்
வெட்கம் விட்டு கேட்காமலே
எடுத்து அள்ளியும்
ஆசை அடங்குவதாயில்லை.
நானும் விடுவதாயில்லை.

இதையெல்லாம் ஒரு கவிதை
என்று நீங்கள் நம்பினால்
ஐஸ்கிரீம் என்று
தலைப்பிட்டுக் கொள்ளுங்கள்.