தியானத்தில் குண்டலினியின் ஒளியை உணரலாம்

கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட்
பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்(டு)
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்
பிண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே.    –  (திருமந்திரம் – 599)

விளக்கம்:
மெய், கண், நாக்கு, செவி, மூக்கு ஆகிய ஞானக் கூட்டத்தினுள் இசைந்து நிற்கும் பழம்பொருள் ஒன்று நம்முள்ளே உண்டு. அது பரம்பொருளாகிய நம் சிவபெருமான் ஆகும். அண்ணாக்கின் உள்ளே மூச்சுக்காற்றில் மனம் செலுத்தி தியானம் செய்தால், பிளந்த நாக்கை உடைய பாம்பினைப் போன்ற குண்டலினியின் அகண்ட ஒளியை உணரலாம்.  நீண்ட காலம் உயிர்ப்புடன் வாழலாம்.

பண் – இசை,   அண்ணாக்கு – உள்நாக்கின் மேல் உள்ள துளை,   பிண்ணாக்கு – (பிள் + நாக்கு) பிளவு உடைய நாக்கு