பிரம்ம ஞானம்

சத்திய மும்தவம் தானவன் ஆதலும்
எய்த்தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்
ஒத்த உயிர்கள் உண்டா யுணர்வுற்று
பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே.  – (திருமந்திரம் – 228)

விளக்கம்:
சத்திய வழியில் நின்று, தவத்தினால் தான் சிவம் ஆகி, மனத்தை ஐம்பொறிகளின் வழியே செல்ல விடாமல் தடுத்து, உயிரும் உணர்வும் ஒருமித்து நிற்கும் யோகப்பயிற்சிகளைச் செய்து பந்தங்களை அறுத்து பிரம்ம ஞானத்தை அடைபவர்களே அந்தணர் ஆவார்கள்.