நரபதியின் கடமை

ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின் றவர் தம்மை
ஞானிக ளாலே நரபதி சோதித்து
ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே. – (திருமந்திரம் – 242)

விளக்கம்:
ஞானமில்லாதவர்கள் சடை, குடுமி, பூணூல் போன்ற அலங்காரங்களைச் செய்து கொண்டு ஞானிகளைப் போல நடிக்கிறார்கள். அப்படி நடிப்பவர்களை அந்நாட்டின் மன்னன் உண்மையான ஞானிகளைக் கொண்டு சோதித்து உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நாட்டில் உண்மையான ஞானம் விளங்கும்.

நரபதி – மன்னன்