கல்வி கற்ற வல்லவர்கள்!

நில்லாது சீவன் நிலையன்று எனஎண்ணி
வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்
கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே.  – (திருமந்திரம் – 314)

விளக்கம்:
கற்று அறிந்த வல்லவர்கள், இந்த உடலில் உயிர் நிலையாக நில்லாது என்பதைப் புரிந்து கொள்வார்கள். நிலையாமையைப் பற்றிப் புரிந்திருப்பதால் அவர்கள் தான தர்மத்திலும், தவத்திலும் தங்கள் காலத்தைக் கழிப்பார்கள். இறை பற்றிய கல்வி இல்லாதவர்கள் கீழானவர் ஆவார்கள். அவர்கள் இந்த உலகத்தில் கொடிய வினைகளால் விளையும் துயரங்களை அனுபவிப்பார்கள்.