நோக்கம் உயர்ந்து இருக்க வேண்டும்

விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி
கண்ணினின் உள்ளே கலந்துஅங் கிருந்தது
மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின்
றெண்ணி எழுதி இளைத்துவிட் டாரே. – (திருமந்திரம் – 315)

விளக்கம்:
வானளவு உயர்ந்திருக்கும் மரத்தில் விளைந்திருக்கும் விளாம்பழத்தை உண்ண விரும்பினால், நம்முடைய கண் பார்வை மேல் நோக்கி இருக்க வேண்டும். அப்போது தான் உயர்ந்த கிளைகளில் இருக்கும் விளாம்பழம், பறிப்பதற்கு வசதியாக, நம் கண்களுக்குத் தெரியும். அதை விட்டு விட்டு நாம் மரத்தின் கீழே உதிர்ந்து கிடக்கின்ற பிஞ்சுக்காய்களை எடுத்துக் கொண்டு, அதையே கிடைப்பதற்கு அரிய விஷயமாக நினைக்கக் கூடாது. சிலர் அப்படித்தான். உலக விஷயங்களைப் பெரிதாக நினைத்து அவற்றைப் பற்றி எழுதி வீணாகப் போகிறார்கள்.

கல்வியினால் நமது நோக்கங்கள் உயர்ந்ததாக இருக்க வேண்டும். அற்ப விஷயங்களில் மனம் மயங்கக் கூடாது.