உள்ளே ஊறும் அமுதத்தை நாடுவோம்!

உண்ணீர் அமுத முறும் ஊறலைத்திறந்து
எண்ணீர் குரவன் இணையடித் தாமரை
நண்ணீர் சமாதியின் நாடிநீ ரால்நலம்
கண்ணாற் றொடேசென்று கால்வழி காணுமே. – (திருமந்திரம் – 336)

விளக்கம்:
நம்முள்ளேயே அமுதம் ஊறும் ஒரு ஊறல் உள்ளது. அந்த ஊறலைத் திறந்து நாம் அமுதம் பருகுவதில்லை. நம் சிவபெருமானின் திருவடியையும் நாம் எண்ணுவதில்லை. சமாதி நிலையை நாடி அதில் பொருந்தி இருப்பதுமில்லை. சமாதியில் இருந்தால் அருள் நீரால் நலம் பெறலாம். சமாதி நிலையில் நின்று தொடர்ந்து கவனித்துப் பார்த்தால் பிராணன் செயல்படும் முறையைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் பாடலுடன் திருமந்திரத்தின் முதல் தந்திரம் நிறைவு பெறுகிறது.