சிவனையும் சக்தியையும் பிரித்துப் பார்க்க முடியாது

ஆதியோ டந்தம் இலாத பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை
சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாந்
தீதில் பரையதன் பால்திகழ் நாதமே. – (திருமந்திரம் – 381)

விளக்கம்:
மேலான விஷயங்களுக்கு எல்லாம் மேலானவன் நம் சிவபெருமான். சிவபெருமானிடம் இருந்து பிரிக்க முடியாத ஞான நிலையாக விளங்குபவள் சக்தி. உலகமெங்கும் பரந்து நிற்கும் அந்தப் பேரொளியில் சிவனும் விளங்குகிறான். தீமை ஏதும் இல்லாத சக்தியும் அந்தப் பேரொளியில் விளங்குகிறாள். அருட் பேரொளியில் சிவனும், சக்தியும் சேர்ந்து விளங்குவதால் படைப்புக்கள் யாவும் நிகழ்கின்றன.