ஐவரின் ஐந்து தொழில்கள்

ஆகாய மாதி சதாசிவ ராதியென்
போகாத சத்தியுட் போந்துடன் போந்தனர்
மாகாய ஈசன் அரன்மால் பிரமனாம்
ஆகாயம் பூமி காண அளித்தலே. – (திருமந்திரம் – 400)

விளக்கம்:
வானம், காற்று, தீ, நீர், நிலம் ஆகிய ஐந்து பூதங்களுக்கும் முறையே சதாசிவன், மகேசுவரன், உருத்திரன், திருமால், பிரமன் ஆகியோர் தலைவராக இருக்கிறார்கள். எதிலும் நீங்காமல் இருக்கும் சிவசக்தி ஆனவர்கள், இந்த ஐவரின் தொழிலிலும் பங்கு கொள்கிறார்கள். மகேசுவரன், உருத்திரன், திருமால், பிரமன் ஆகிய நால்வரும் உருவம் உடையவர்கள். சதாசிவம் அரூபமானவர். இந்த ஐவரின் தொழிலைத்தான் நாம் பூமியாகப் பார்க்கிறோம்.