அவனே நம்மைக் காக்கிறான்!

தானொரு காலந் தனிச்சுட ராய்நிற்குந்
தானொரு கால்சண்ட மாருத மாய்நிற்குந்
தானொரு காலந் தண்மழை யாய்நிற்குந்
தானொரு காலந்தண் மாயனு மாமே.   – (திருமந்திரம் – 415)

விளக்கம்:
தனிச்சுடராய் நிற்கும் சூரியன் நம் சிவபெருமானே. சுழன்று வீசும் சூறாவளிக் காற்றும் அவனே. குளிர்ந்த மழையாகப் பொழிபவனும் நம் சிவபெருமான் தான். இவற்றில் இருந்து நம்மைக் காப்பவனும் அதே சிவபெருமான் தான்!