உள்ளொளி நாடி ஞானம் பெறுவோம்!

அணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி
நணுகினும் ஞானக் கொழுந்தொன்று நல்கும்
பணிகினும் பார்மிசைப் பல்லுயி ராகித்
தணிகினும் மண்ணுடல் அண்ணல்செய் வானே.   – (திருமந்திரம் – 420)

விளக்கம்:
சிவன் நாம் அணுகுவதற்கு எட்டாத தூரத்தில் இருப்பவன் போலத்தான் தோன்றும். நாம் நமது உள்ளொளியான குண்டலினியை நாடித் தியானம் செய்தால் ஞான வடிவில் சிவபெருமானை உணரலாம். ஞானத்தினால் மட்டுமே அவனை உணரலாம், அவனை அடையலாம், பிறவி அறுக்கலாம். உள்ளொளி நாடி ஞானம் பெறாமல், அவனைப் பணிந்தாலும், நாம் ஞானம் பெறும் வரை அவன் நமக்கு அடுத்தடுத்து பிறவிகளைத் தந்து கொண்டே தான் இருப்பான்.