ஒளித்து வைத்து உள்ளுற உணர்ந்தேன்!

ஒளித்துவைத் தேனுள் ளுறவுணர்ந் தீசனை
வெளிப்பட்டு நின்றருள் செய்திடு மீண்டே
களிப்பொடுங் காதன்மை என்னும் பெருமை
வெளிப்பட் டிறைஞ்சினும் வேட்சியு மாமே.   – (திருமந்திரம் – 437)

விளக்கம்:
“நான் ஈசனை என் மனத்தில் உணர்ந்து, அவனை வழிபடுகிறேன். அவனும் இந்தப் பிறவியிலேயே எனக்கு தன்னை வெளிப்படுத்தி அருள்கிறான்” என்று சொல்கிறார் திருமூலர். நாமும் ஈசனின் மகிழ்ச்சி கலந்த அன்பை உணர்ந்து பெருமை கொள்வோம். நமது வழிபாட்டில் அந்தப் பெருமை வெளிப்பட வேண்டும். ஈசனின் பெருமையை உணர்ந்து அகவழிபாடு செய்தால், அவன் நமக்கும் தன்னை வெளிப்படுத்தி நம் விருப்பத்தை நிறைவேற்றுவான்.

காதன்மை – அன்பு

One thought on “ஒளித்து வைத்து உள்ளுற உணர்ந்தேன்!

Comments are closed.