இருக்கிறான்! நம்மால் தான் காண முடிவதில்லை

மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும்
உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே
கண்ணொன்று தான்பல காணுந் தனைக்காணா
அண்ணலும் இவ்வண்ண மாகிநின் றானே.   – (திருமந்திரம் – 440)

விளக்கம்:
ஒரே மண்தான் பலவிதமான பாத்திரங்களாக உருவாகின்றன. அது போல் உலகத்து உயிர்களில் எல்லாம் சிவனே இருக்கிறான். நமது கண்கள் பலவிதமான புறப்பொருட்களைக் காண்கின்றன. ஆனால் தன்னைத் தானே காண முடிவதில்லை. அது போல் நம்மால் நம்முள் இருக்கும் சிவனைக் காண முடிவதில்லை.