நான் அவன் விருப்பத்திற்கு உரியவன்!

உகந்துநின் றேபடைத் தான்உல கேழும்
உகந்துநின் றேபடைத் தான்பல ஊழி
உகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம்
உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே.  – (திருமந்திரம் – 445)

விளக்கம்:
சிவபெருமான் ஏழு உலகங்களையும் தன்னுடைய விருப்பத்தினால் படைத்தான். பல யுகங்களையும் விரும்பிப் படைத்தான். மண், காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களையும் விரும்பியே படைத்தான். இந்த உடலும் உயிரும்  படைக்கப் பட்டதும் அவன் விருப்பப்படியே !

நாமெல்லாம் சிவபெருமானின் விருப்பத்திற்கு உரியவர்களே.